இணைந்து நடத்தல்

>> Monday, September 28, 2009

ஹிந்தியில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களில் ஒருவரான வினோத் குமார் ஷுக்லா நாவல், சிறுகதை, கவிதை என பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவரின் Naukar Ki Kameez (The Servant's Shirt) என்ற நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. Deewar Mein Ek Khirkee Rahati Thi என்ற நாவல் A Window Lived in a Wall என்று ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலுக்காக 1999 ஆண்டில் சாகித்ய அகாதமி விருது பெற்றார். இவரின் சில கவிதைகள் Poetry International, Pratilipi போன்ற தளங்களில் வாசிக்க கிடைக்கின்றன. இவரின் 'A MAN HAD SAT DOWN IN DESPERATION' என்ற கவிதையை மொழிபெயர்த்து இடுகின்றோம்.


இணைந்து நடத்தல்

விரக்தியில் சரிந்து
வீற்றிருந்தான் ஒருவன்
அவனை அறி்ந்திலேன் எனினும்
விரக்தியை அறிவேன்
ஆதலினால் அவனிடம் சென்று
கரத்தை நீட்டினேன்.
கரத்தைப்பற்றி எழுந்தானவன்.
என்னை அறிந்திலையெனினும்
நீளுமென் கரத்தை அறிவான் அவன்.
இணைந்தே நடந்தோம் நாங்கள்
ஒருவரையொருவர் அறிந்திலையெனினும்
இணைந்து நடப்பதைப்பற்றி
அறிந்திருந்தோம்.

***

A Man Had Sat Down in Desperation

A man had sat down in desperation
I did not know the man
But I knew the desperation
So I went to him
And extended my hand
Holding my hand, he rose
He did not know me
But he knew the extending of my hand
We walked together
We did not know each other
But we knew walking together.

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP