அகம் மற்றும் புறப்பாடல்கள் ஆங்கிலத்தில்..

>> Sunday, July 26, 2009

223. குறிஞ்சி

‘பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம்’ என்றி; அன்று, இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல;
தழலும் தட்டையும் முறியும் தந்து, ‘இவை
ஒத்தன நினக்கு’ எனப் பொய்த்தன கூறி,
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே.

வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு. வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி கூறியது.

– மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன்

223. Kurunthokai

Once you said
let’s go, let’s go
to the gay carnival in the big city;
that day
the good elders spoke of many good omens
for our going.
But he waylaid me,
gave me a sling shot and rattles
for scaring parrots,
and a skirt of young leaves
which he said look good
on me,
And with his lies
he took the rare innocence
that mother has saved for me.
And now I am like this.

Poet: Maturaikkataiyattar Makan Vennakan
Translated by A.K.Ramanujan


74. புறநானூறு

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
‘ஆள் அன்று’ என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே?
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.

சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டு, குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து, ‘தண்ணீர் தா’ என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.

74. Purananuru

If a child of my clan should die,
if it is born dead,
a mere glob of flesh
not yet human,
they will put it to the sword
to give the thing
a warrior’s death.
Will such kings
bring a son this world
to be kept now
like a dog at the end of a chain
who must beg,
because of fire in the belly,
for a drop of water
and lap up a beggar’s drink
brought by jailers,
friends who are not friends?

Ceramaan Kanaikkal Irumporai fought with Colan Cerikanan on the field of Tirupporppuram, was captured, imprisons at Kutavayir Kottam (fortress), asked "Give me water", did not get it, then [When he asked again] did get it, kept it in his hand without drinking, and died. This is his song as he died. (colophon from Purananuru by George Hart and Hank Heifetz)

Translated by A.K.Ramanujan


நன்றி : http://karkanirka.wordpress.com/

Read more...

ஏ. கே. ராமானுஜன் – தமிழின் “அகநிலப்பரப்பை” புறத்திற்கு எடுத்துச் சென்றவர்.

ங்கிலேயக் காலனியம், தங்கள் தேசத்து மற்றும் ஐரோப்பிய ஆய்வாளர்கள், அறிவுஜீவிகள் கொண்டு “இந்தியவியல்” (Indology) என்கிற ஒரு ஆய்வுப் புலத்தைக் கட்டமைத்தது. இந்த ஆய்வுப்புலம் இந்திய மொழிகளில் குறிப்பாக வடமொழியான சமஸ்கிருதத்தில் இருந்த எண்ணற்ற புராணங்கள், வேதங்கள் மற்றும் இலக்கியங்களை மொழிபெயர்த்து ஆங்கில உலகிற்கு இந்தியா பற்றிய ஒரு அறிமுகத்தை செய்வித்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய ஆய்வாளர்கள், அறிவுஜிவிகள் ஆங்கிலம் படித்து, இந்தியா பற்றி ஆய்வுகளையும், இந்திய இலக்கியங்களையும் மொழிபெயர்ப்புகள் வழியாக வெளி உலகிற்கு கொண்டு செல்வதற்கு முயன்றனர். இத்தகைய இந்தியவியல் ஆய்வுப்புலத்தின் மிக முக்கிய ஆய்வாளர்களில் ஒருவர் ஏ.கே. ராமானுஜன். இவர் வடமொழியில் அதீத கவனம் செலத்திவந்த மேற்கத்திய ஆய்வுப் புலத்தை தென்னிந்திய இலக்கியங்கள் நோக்கி திருப்பிவிட்டவர் என்றால் மிகையாகாது.



தெற்காசிய ஆய்வியலில் குறிப்பிடத்தகுந்தவரும், இந்தியாவின் தென்பகுதிகளின் இலக்கியங்களையும், இந்திய நாட்டுப்புறக் கதைகளையும் விரிவாக ஆய்வு செய்து அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தென்னிந்தியா பற்றிய கவனத்தை உலக அறிவுச்சுழலில் உருவாக்கிய ஒரு முக்கிய இலக்கிய, மொழியியல், ஆய்வாளர், கவிஞர் ஏ.கே. ராமானுஜன்.



1929-ல் மைசூரில் பிறந்தவர். 1959-ல் அமேரிக்காவிற்கு ஆய்விற்காக சென்றவர். 1993-ல் இறக்கும்வரை பல பல்கலைக்கழகங்களில் ஆய்வாளராக, விரிவுரையாளராக இருந்தவர். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய அறிவுஜீவிகளில் ஒருவரும், பல பல்கலைக் கழகங்களில் இந்திய குறிப்பாக தென்னிந்திய மொழிகள் பற்றியும், அவர்களது இலக்கியம், வாழ்வியல் பற்றியும் ஆய்வுப்புலங்களையும், தென்னிந்திய மொழிகளுக்கான கவனத்தையும் உருவாக்கியவர். அமேரிக்க-ஐரோப்பிய தத்துவங்களும், அதன் யுத-கிறித்துவ அடிப்படைகளும் உலக சிந்தனை முறையில் செலத்தும் ஆதிக்கத்திற்கு எதிராக, கீழ்திசையியல் சுதந்திரச் சிந்தனைமுறையை முன்வைத்தவர்.



ஆங்கிலத்தில் எழுதியவர் என்றாலும், தான் பிறந்த நிலத்தின் மொழியான கன்னடம் மற்றும் தனது குடும்ப மொழியான தமிழ் ஆகியவற்றில் புலமை மிக்கவராக இருந்ததால், அம்மொழிகளின் முக்கிய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். குறிப்பாக, தமிழின் சங்க இலக்கியங்களான அகநானூறு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்திய நாட்டுப்புறக் கதைகளை தானே தொகுத்து அவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மொழியியல் குறித்து ஆய்வுகள் செய்துள்ள ஒரு மொழியியல் அறிஞர். சிவம் என்கிற புராணிகம் பற்றிய இவரது ஆய்வு இந்திய புராணிக ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஐரோப்பிய-அமேரிக்க மையவாத காலனிய சிந்தனை கட்டமைக்கும் ஒருபடித்தான (Streotype) (கருப்பர்கள், காட்டுமிராண்டிகள், பழமைவாதிகள், நாகரீகமற்றவர்கள் இப்படியான) ஆசிய-இந்திய காலனிய பிம்பத்திற்கு எதிராக, சுதந்திரமான கீழ்திசைவியல் சிந்தனை பற்றிய கருத்தாக்கத்தை முன்வைத்தவர். “இந்திய வழியில் சிந்திப்பது” (Is There an Indian Way of Thinking?) என்பதான பின்காலனிய ஆய்வியல் கருத்தாக்கத்தை உருவாக்கியவர். இவரது கவிதைகள் ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்தால் முழுத்தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இவரது சில கவிதைகள் பின்காலனியக் கருத்தாக்கமானcover கலப்பினம் (hybridity), போலச்செய்தல்-பகடி (mimicry) என்பதை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளதை ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள். இவர் குறித்த சுருக்கமான அறிமுகத்தை ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம். இவரது சில கவிதைகளை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம்.

இவரது நாட்டுப்பறவியல் நூலான Folktales from India, Oral Tales from Twenty Indian Languages. இங்கு இணையத்தில் வாசிக்க கிடைக்கும். இவரது நூல்கள் சில தமிழில் வெளிவந்துள்ளது.



எஸ். ராமகிருஷ்ணன் ஏ.கே. ராமானுஜன் பற்றி எழுதிய விரிவான அறிமுகம் உயிர்மை இதழில் வெளிவந்துள்ளது.



எட்டுதிக்கும் ஏ.கே. ராமானுஜன் போன்ற மொழிபெயர்ப்பு முன்னொடிகளுக்கு செய்யும் கௌவரமாக, அவரது மொழிபெயர்ப்பு ஒன்றை மீள்பதிவு செய்து தனது பணியைத் துவக்குகிறது.



– குறிப்பு – ஜமாலன். – 26/07/2009

Read more...

அறிமுகம்

>> Saturday, July 25, 2009

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’ என்றான் மகாகவி பாரதி. ஒரு மொழி மற்றொரு மொழியிலிருந்து பெறும் கலைச்செல்வங்கள் அம்மொழியை மேலும் வளமானதாகவும், வனப்பானதாகவம் மாற்றுகிறது. பழம்பெருமையும், பாரம்பரீயமும் பேசி தனது மொழியை தானே உயர்த்திக்கொண்டு வாழும் "கிணற்றுத்தவளை" வாழ்வைவிட்டு வெளியேறி உலகின் எட்டுத்திக்கும் சுழற்றியடிக்கும் காற்றை, தென்றலை சுவாசிக்க வெவ்வேறு மொழிகளின் வளர்ச்சியையும் புரிந்துகொண்டு அதனை நமது மொழிக்குள் கொண்டுவருவதும், நமது மொழியின் சிறப்பை பிற மொழிகள் அறிந்து கொள்வதற்குமான ஒரு பாலமே மொழிபெயர்ப்பு.

இவ்வலைப்பதிவு மொழிபெயர்ப்பிற்காகவென தனிக்கவனம் செலுத்தும் வண்ணம் உருவாக்கப்படுகிறது. இது ஒரு கூட்டு முயற்சி. நண்பர்கள் இப்பணியில் இணைந்து செயல்பட ettuththikkum@gmail.com மின்அஞ்சலில் தொடர்புகொண்டு தங்களது மொழி பெயர்ப்புகளை வலை ஏற்றலாம். விதிமுறை என்று எதுவும் இல்லை. அதிகபட்சம் இலக்கியம், கலை படைப்புகள் மற்றும் அவை சார்ந்த கோட்பாடுகள், உரையாடல்கள் மற்றும் விவாதங்களை மொழிபெயர்த்து வெளியிடலாம்.

  1. நீங்கள் மொழிபெயர்க்கும் படைப்பை அல்லது கட்டுரையை மூல மொழியுடன் அனுப்பினால் அதனை மொழிபெயர்ப்பில் திறமை உள்ள நண்பர்களிடம் தந்து சரிபார்த்து வெளியிடப்படும்.

  2. அரசியல் சார்ந்த மொழிபெயர்ப்புகளை தவிர்ப்பது நலம். கலை, இலக்கிய மொழிபெயர்ப்புகளுக்கு அதிகம் கவனம் செலுத்துதல் நலம்.

  3. கூடுமானவரை ஆங்கிலம்-தமிழ் அல்லது தமிழ்–ஆங்கிலம் என இருந்தால் சிறப்பு. பிறமொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படுபவை அம்மொழிதெரிந்த நண்பர்களிடம் தந்து சரிபார்க்கப்பட்டே வெளியிடப்படும். அதற்கு சற்று தாமதமாகலாம்.

  4. வருட இறுதியில் சிறந்த மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து நூலக வெளியிடும் எண்ணமும் உள்ளது. அதனால் கூடுமானவரை காப்பிரைட் பிரச்சனைகள் இல்லாமல் மொழிபெயர்ப்பது நல்லது. அப்படி மொழிபெயர்த்துவிட்டாலும், அதற்கான காப்பிரைட் பெற சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு நாம் முயற்சிப்போம்.

மொழிபெயர்ப்பிற்கான ஒரு வலைப்பதிவாக இதனை துவக்கியுள்ளோம். துவக்கமாக எங்களால் இயன்ற மொழிபெயர்ப்புகளை இதில் வெளியிடுகிறோம். நண்பர்கள் தங்களது மொழிபெயர்ப்புகளை அனுப்பலாம். அல்லது இதில் வெளிவரும் மொழிபெயர்ப்புகளையும் திருத்தலாம். இந்த கூட்டமுயற்சியால் "பலநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை" தமிழில் கொண்டுவருவது நமக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் பயனுடையதாக அமையும்.

சிற துளிகள்தான் பெருவெள்ளத்திற்கு காரணம் என்பது நமது மூதாதைகள் கண்ட முதுமொழித்தானே….

அன்புடன்

எட்டுத்திக்கும்

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP