உணரட்டுமா என்றான் அவன்

>> Tuesday, October 19, 2010

உணரட்டுமா என்றான் அவன்

(உணரட்டுமா என்றான் அவன்
எவ்வளவு என்றாள் அவள்
நிறைய என்றான் அவன்)
ஏன் கூடாது என்றாள் அவள்

(வாயேன் என்றான் அவன்
ரொம்ப தூரம் வேண்டாம் என்றாள் அவள்
எது ரொம்ப என்றான் அவன்
நீ இருக்குமிடம் என்றாள் அவள்)

இருக்கட்டுமா என்றான் அவன்
(எப்படி என்றாள் அவள்
இதைப்போலத்தான் என்றான் அவன்
நீ முத்தமிட்டால் என்றாள் அவள்

நகரட்டுமா என்றான் அவன்
இது காதலேதான் என்றாள் அவள்)
நீ விரும்பினால்தான் என்றான் அவன்
(ஆனால் என்னைக் கொல்கிறாய் என்றாள் அவள்

என்றாலும் இது வாழ்க்கை என்றான் அவன்
ஆனாலும் உன் மனைவி என்றாள் அவள்
இப்போதே என்றான் அவன்)
ஒ..ஓ என்றாள் அவள்

(டிப்...டாப்...இது அவன்
நின்றுவிடாதே இது அவள்
இல்லை இது அவன்)
மெதுவாக இது அவள்

(வர...வா? என்றான் அவன்
உம்...ம் என்றாள் அவள்
அருமையடி நீ என்றான் அவன்
என்னுடையவன் நீ என்றாள் அவள்)

தமிழில் : பெருந்தேவி


may i feel said he by E. E. Cummings

may i feel said he
(i'll squeal said she
just once said he)
it's fun said she

(may i touch said he
how much said she
a lot said he)
why not said she

(let's go said he
not too far said she
what's too far said he
where you are said she)

may i stay said he
(which way said she
like this said he
if you kiss said she

may i move said he
is it love said she)
if you're willing said he
(but you're killing said she

but it's life said he
but your wife said she
now said he)
ow said she

(tiptop said he
don't stop said she
oh no said he)
go slow said she

(cccome?said he
ummm said she)
you're divine!said he
(you are Mine said she)

Read more...

சலவை - குழூர் வில்சன்

>> Monday, September 27, 2010

வளர்ந்து வரும் இளம் மலையாளக் கவிஞர்களில் குழூர் வில்சன் மிக முக்கியமானவர். மலையாள - தமிழ்க்கவிஞர்கள் சந்தித்துக் கவிதை பற்றி உரையாட குற்றாலத்தில் கூடியபோது கேரளத்தில் இருந்து கலந்து கொண்டார் இவர்.தமிழ்க்கவிதைகளை மிக விரும்பி வாசிப்பவர். மனுஷ்யபுத்திரன், கல்யாண்ஜி என்று மிகச் சில கவிஞர்களையே வாசித்திருக்கும் குழூருக்கு தமிழ்க்கவிதைகளை தொடர்ந்து பரவலாக வாசிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் உண்டு

கொச்சியைச் சேர்ந்த குழூரின் தகப்பனார் அவரின் மொழியிலேயே சொல்வதானல் ‘கெடா வெட்டுக்காரன்’ எனவே மலையாள மொழிசார்ந்த கிராமியப்பாடல்களில் நல்ல தேர்ச்சியும் அது குறித்த தெளிவான பார்வையும் குழூரின் எழுத்துக்களில் தென்படும்

ஏசியாநெட்டில் செய்திப்பிரிவில் பணியாற்றிய வில்ஸன் தற்போது அமீரகத்தில் அஜ்மானில் இயங்கும் பண்பலை ஒன்றின் செய்திப்பிரிவுக்கு தலைமையேற்றிருக்கிறார். அன்றாடச் செய்திகளின் நெருக்கடிகளுக்கிடையிலும் புனைவுக்காகவும் தனது சொந்த மண்ணின் கலை இலக்கியம் சார்ந்த பின்புலங்களுக்காகவும் இயங்கும் எளிய மனது இவருக்குண்டு

***********************

சலவை


சட்டையாகவோ
ஜட்டியாகவோ
இருந்திருந்தால்
அந்த மூலையை நோக்கி
எடுத்தெறிந்திருக்கலாம்

இது
உடம்பு

குளியல் அறையில்
சாதாரணமாய் கழுவினால் போதாது

மிக மோசமான
துணிகளை
சலவைக்காரரிடம்
வெளுக்கக்
கொடுப்பது போல

ஆற்றிற்கோ
கடலுக்கோ சலவைக்குக்
கொடுக்க வேண்டும்

ஒருவேளை
திரும்பத் தந்தாலும்
தரக்கூடும் அது.

*********************************************

பயமாயிருக்கிறது எனக்கு
பணமில்லாத என்னை

வட்டிக்காரனின்
'உள்ளாடைகளற்ற' வசை

கஞ்சி பரிமாறும்
அம்மாவின் கஞ்சத்தனம்

தேய்ந்த செறுப்பின் மீது
அந்தப் பெண்ணின் பார்வை

பிச்சைக்காரனின்
ஏளனச் சிரிப்பு

பேருந்துக்கு பணம் கொடுக்கும்
நண்பனின் நகைச்சுவை

தேநீர்கடை
குமாரன் அண்ணாச்சியின் துர்முகம்

பயமாயிருக்கிறது எனக்கு
பணம் வைத்திருக்கும் உன்னை


தமிழில் : ஆசிப் மீரான்

Read more...

முன்கை பற்றி நடத்தி!

>> Thursday, September 23, 2010

ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;

அணைத்தனன் கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!

என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை

இன்னாது உற்ற அறனில் கூற்றே!

திரைவளை முன்கை பற்றி

வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!


புறநானூறு - 255

பாடியவர்: வன்பரணர்

திணை: பொதுவியல்

துறை: முதுபாலை

விளக்கம் :  http://angumingum.wordpress.com/2008/04/14/words_puram/


***************************************

I am afraid to shout

I am afraid to shout for help
in this tiger infested place.
If I try to lift you by myself-
I can’t hold your broad chest in my arms.

O may unrighteous Death
who has approached you cruelly
feel embarrassed like me.
Dear one, just hold my wrist
and try to walk a little,
We shall try at least to reach
the shade of the hill beyond.

- Vanparanar

Purananuru – 255


Book : Love Stands Alone (Selections from Tamil Sangam Poetry)

Translated By : M.L.Thangappa - நேர்காணல்



Love Stands Alone - நூல் குறிப்புகள் :

http://sharanyamanivannan.wordpress.com/2010/06/27/review-a-r-venkatachalapathys-love-stands-alone/

http://httpdevamaindhan.blogspot.com/2010_02_01_archive.html

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6099

Read more...

என் கனவு

>> Tuesday, September 21, 2010

பல நாட்கள் ஆகிப் போனது
என் கனவை நான் மறந்தே போனேன்
ஆனால் அப்போது அங்கிருந்தது அது
என் முன்னால்
சூரியன் போல பிரகாசமாய்
என் கனவு

அப்புறம் அந்த சுவர் எழுந்தது
மெள்ள எழுந்தது
மெள்ளவே
எனக்கும் என் கனவிற்கும் நடுவே
எழுந்து கொண்டே இருந்தது
வானம் தட்டும் மட்டும்
அந்த சுவர்

நிழல்
நான் கருப்பாக இருக்கிறேன்
நான் அந்த நிழலுள் உறைந்துக் கிடக்கிறேன்
என் கனவின் வெளிச்சம்
இனி என்முன் இல்லை
என் மேல்
வெறும் தடிச்சுவர்
வெறும் நிழல்

என் கைகளே
என் கரிய கைகளே
சுவரை உடைத்து வெளியேறுங்கள்
என் கனவை கண்டெடுங்கள்
உதவுங்கள்
இந்த இருட்டை சிதைக்க
இந்த இரவை நொறுக்க
இந்த நிழலை உடைக்க
ஓராயிரம் சூரிய வெளிச்சங்களாக
சுழலும் ஓராயிரம் சூரியக் கனவுகளாக

தமிழில் : பூங்குழலி



********************************************

It was a long time ago
By Langston Hughes

It was a long time ago.
I have almost forgotten my dream.
But it was there then,
In front of me,
Bright like a sun--
My dream.
And then the wall rose,
Rose slowly,
Slowly,
Between me and my dream.
Rose until it touched the sky--
The wall.Shadow.
I am black.
I lie down in the shadow.
No longer the light of my dream before me,
Above me.
Only the thick wall.
Only the shadow.
My hands!
My dark hands!
Break through the wall!
Find my dream!
Help me to shatter this darkness,
To smash this night,
To break this shadow
Into a thousand lights of sun,
Into a thousand whirling dreams Of sun!

Read more...

சங்கப் பாடல்கள் - Love Stands Alone

>> Tuesday, August 31, 2010

நல்லந்துவனார் அருளிய


நெய்தற்கலி (கலித்தொகை 119)

அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப்
பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர,
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,
நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தர,
கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப,

தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த,
சிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென,
பறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின்
கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர,

மா வதி சேர, மாலை வாள் கொள,
அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்,

மாலை என்மனார், மயங்கியோரே.


The Cruelest Hour

The sun descends into the caverns of the
darkening western hills
drawing the day into his mouth of receding rays
with which he lit up heaven and earth in the morning
Darkness overhangs and waits
Like the black complexioned god of the deadly battle wheel.
As the beautiful moon begins to climb the vault of blue,
Lotus petals begin to close like eyelids drooping in slumber.
Trees with their bending boughs appear like worthy men
Who hang their heads in modesty on hearing praise.
Pearly buds unfold in the dark green foliage,
looking as though the bushes are grinning.
The humming notes of the honey bees flow to match
the music of the cowherds’ flutes.
The birds come flying to their roosts.
The cows are hurrying back from pasture, longing for their calves.
And all other animals reach their habitations.
The priests welcome the evening with the chanting of hymns.
Torch in hand, graceful maidens light the lamps in their homes.
Thus comes the twilight hour
which the naïve call evening.
But it is really the cruelest hour that has come
to torment lovesick girls in their loneliness.

(what the girl told her friend)

Neidal

- Nallanduvanar

KALITHOKAI   119

Book : Love Stands Alone (Selections from Tamil Sangam Poetry)

Translated By : M.L.Thangappa    -     நேர்காணல்

Love Stands Alone - நூல் குறிப்புகள் :

http://sharanyamanivannan.wordpress.com/2010/06/27/review-a-r-venkatachalapathys-love-stands-alone/

http://httpdevamaindhan.blogspot.com/2010_02_01_archive.html
 
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6099

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 12 - சுகுமாரன்

>> Monday, August 16, 2010

மச்சுபிச்சுவின் சிகரங்கள்


பன்னிரண்டு
@
என்னுடன் உயிர்தெழுந்து வா, என் சகோதரா.

உனது துயரங்களால் புதைக்கப்பட்ட ஆழத்திலிருந்து
உனது கைகளை நீட்டு.
இறுகிய கல்லறைகளிலிருந்து நீ திரும்பப்போவதில்லை
புதையுண்ட காலத்திலிருந்து நீ எழப்போவதில்லை
உனது கனத்த குரலோ
கண்குழியிலிருந்து தோண்டப்பட்ட உனது விழிகளோ
மீண்டும் வரப்போவதில்லை.

பூமியின் அடியாழத்திலிருந்து என்னைப் பார்.
நிலங்களை உழுபவனே,
நெசவாளியே,
வாய் திறவாத மேய்ப்பனே,
குலச்சின்னத்தின் சந்ததியே,
வஞ்சிக்கும் சாரத்தின்மேல் நிற்கும் கொத்தனே,
நசுங்கிய விரல்களுள்ள பொற்கொல்லனே,
நாற்றுகளை நினைத்துப் பதறும் உழவனே,
களிமண்ணுக்கிடையே விரயமாகும் குயவனே,
உனது
புதையுண்ட புராதன துக்கங்களை
புதுவாழ்வின் குவளைக்குள் கொண்டுவா.

உனது இரத்தத்தையும் உனது தழும்பையும்
என்னிடம் காட்டு.
பிறகு
வைரம் ஒளிமங்கிப்போனதாலோ
சோளக்கதிரையோ கல்லையோ
காலத்திற் தராமல் நிலம் பொய்த்ததாலோ
சவுக்கடி பட்டது இங்கேதான் என்று
என்னிடம் சொல்.
நீ இடறிவிழுந்த பாறையும்
உனது உடலை சிலுவையேற்ற
அவர்கள் தறித்த அந்த மரத்தையும்
என்னிடம் காட்டு.

புராதன விளக்குகளையேற்ற
சிக்கிமுக்கிக் கற்களை உரசு.
நூற்றாண்டுகளாக
உனது காயங்களில் ஒட்டியிருக்கும்
சவுக்குகளைக் கொளுத்து.
உனது இரத்தத்துடன் ஒளிரும்
கோடரிகளைக் கொளுத்து.

உனது இறந்த உதடுகளுக்காகப் பேசவந்திருக்கிறேன் நான்.

பூமிமுழுவதிலும்
இறந்த உதடுகள் ஒன்றிணையட்டும்.
ஆழங்களிலிருந்து
இந்த நீண்ட இரவை எனக்காக நெய்துகொடு.
உன்னோடு இங்கே நிலைப்பேன்.

சங்கிலி சங்கிலியாக
கண்ணி கண்ணியாக
படிப்படியாக
எல்லாவற்றையும் என்னிடம் சொல்.
நீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளைக் கூராக்கு.
சூரியச் சீற்றத்தின் பெருக்காக
புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக
அந்தக் கத்திகளை
என் மார்பில் பாய்ச்சு.
மணிக்கணக்காக
நாட்கணக்காக
ஆண்டுக்கணக்காக
இருண்ட யுகங்களாக
நட்சத்திர நூற்றாண்டுகளாக
என்னை அழவிடு.

எனக்கு மௌனத்தைக்கொடு, எனக்கு நீரைக்கொடு,
நம்பிக்கையையும்.

எனக்கு போராட்டத்தையும் இரும்பையும்
எரிமலைகளையும் கொடு.

காந்தங்கள்போல என் உடலோடு தொற்றட்டும் உடல்கள்.

எனது நாளங்களுக்குள்ளும் எனது நாவுக்குள்ளும்
விரைந்து வா.

எனது குரலினூடே எனது இரத்தத்தினூடே பேசு.
@

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)



நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 11 - சுகுமாரன்

>> Monday, August 9, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்


பதினொன்று
@

குலைந்த அழகினூடே
இரவு உருவாக்கிய கல்லினூடே
என் கைகளை ஆழ்த்தினேன்.
ஆயிரமாண்டுகளாகச் சிறைப்பட்ட பறவைபோல,
பழைய, நினைக்கப்படாத மனித இதயம்போல
என்னுள் துடித்தது அது.

இன்று
இந்த மகிழ்ச்சியை மறக்க விடு.
எல்லாக் கடல்களையும்விடப் பரந்தது
ஏனெனில்
எல்லாக் கடல்களையும்விட
கடலின் கழுத்துநகையான தீவுகளைவிட
மனிதன் பரந்தவன்.
ஒரு கிணற்றில் விழுவதுபோல
நாம் அவனுக்குள் விழவேண்டும்.
மர்ம நீரின் கிளைகளுடனும்
மூழ்கிப்போன உண்மைகளுடனும்
மேலேறி வரவேண்டும்.

கல்லின் சுற்றளவை,
வலுவான பரிமாணங்களை,
எல்லைதாண்டிய நீட்சியை,
தேன்கூட்டின் அடித்தளங்களை
மறந்துவிட என்னை அனுமதி.
ஒரு செங்கோணத்தின் கிடைக்கோடாக
கம்பளிச் சட்டைக்கும்
கரிப்பு ரத்தத்துக்கும் அடியில் நகர
என் கைக்கு அனுமதி கொடு.

குதிரை லாடம்போன்ற துருப்பிடித்த சிறகுகளுடன் பறந்து
என் நெற்றிப்பொட்டில் கொத்துகிறது வெறிக்கழுகு.
அதன்
பிணந்தின்னிச் சிறகுகளின் சூறாவளி
சாய்வான படிக்கட்டுகளில்
இருட்புழுதியை வாரியிறைக்கிறது.
அந்தப் பறவையின் வேகத்தையோ
அதன்
நகங்களின் குருட்டு அரிவாள்களையோ
நான் பார்க்கவில்லை.

புராதன மனிதனை, அடிமையை,
வயலில் கிடந்துறங்குபவனை
நான் பார்க்கிறேன்.
ஓர் உடலை
ஓர் ஆயிரம் உடல்களை
ஓர் ஆணை
ஓர் ஆயிரம் பெண்களை
இரவாலும் மழையாலும் பொசுக்கப்பட்டு,
இருண்ட காற்றால்
இறுகிய கற்கள்போலக் கறுத்தவர்களை
நான் பார்க்கிறேன்:
விராகோச்சாவின் மைந்தன் யுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ்
பச்சை நட்சத்திரத்தின் வாரிசு யுவான் கோல்டுபெல்லி
மரகதத்தின் பேரன் யுவான் பேர்·புட்
என்னுடன் உயிர்தெழுகிறார்கள்,
எனது சகோதரர்களாக!
@


குறிப்பு:-
யுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ் (Juan Splitstones) கல்வெட்டுபவன்
யுவான் கோல்டுபெல்லி (Juan Coldbelly) ஆறிய உணவை உண்பவன்
யுவான் பேர்·புட் (Juan Barefoot) வெறுங்காலில் நடப்பவன்

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)



நன்றி : சுகுமாரன்

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP