சலவை - குழூர் வில்சன்

>> Monday, September 27, 2010

வளர்ந்து வரும் இளம் மலையாளக் கவிஞர்களில் குழூர் வில்சன் மிக முக்கியமானவர். மலையாள - தமிழ்க்கவிஞர்கள் சந்தித்துக் கவிதை பற்றி உரையாட குற்றாலத்தில் கூடியபோது கேரளத்தில் இருந்து கலந்து கொண்டார் இவர்.தமிழ்க்கவிதைகளை மிக விரும்பி வாசிப்பவர். மனுஷ்யபுத்திரன், கல்யாண்ஜி என்று மிகச் சில கவிஞர்களையே வாசித்திருக்கும் குழூருக்கு தமிழ்க்கவிதைகளை தொடர்ந்து பரவலாக வாசிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் உண்டு

கொச்சியைச் சேர்ந்த குழூரின் தகப்பனார் அவரின் மொழியிலேயே சொல்வதானல் ‘கெடா வெட்டுக்காரன்’ எனவே மலையாள மொழிசார்ந்த கிராமியப்பாடல்களில் நல்ல தேர்ச்சியும் அது குறித்த தெளிவான பார்வையும் குழூரின் எழுத்துக்களில் தென்படும்

ஏசியாநெட்டில் செய்திப்பிரிவில் பணியாற்றிய வில்ஸன் தற்போது அமீரகத்தில் அஜ்மானில் இயங்கும் பண்பலை ஒன்றின் செய்திப்பிரிவுக்கு தலைமையேற்றிருக்கிறார். அன்றாடச் செய்திகளின் நெருக்கடிகளுக்கிடையிலும் புனைவுக்காகவும் தனது சொந்த மண்ணின் கலை இலக்கியம் சார்ந்த பின்புலங்களுக்காகவும் இயங்கும் எளிய மனது இவருக்குண்டு

***********************

சலவை


சட்டையாகவோ
ஜட்டியாகவோ
இருந்திருந்தால்
அந்த மூலையை நோக்கி
எடுத்தெறிந்திருக்கலாம்

இது
உடம்பு

குளியல் அறையில்
சாதாரணமாய் கழுவினால் போதாது

மிக மோசமான
துணிகளை
சலவைக்காரரிடம்
வெளுக்கக்
கொடுப்பது போல

ஆற்றிற்கோ
கடலுக்கோ சலவைக்குக்
கொடுக்க வேண்டும்

ஒருவேளை
திரும்பத் தந்தாலும்
தரக்கூடும் அது.

*********************************************

பயமாயிருக்கிறது எனக்கு
பணமில்லாத என்னை

வட்டிக்காரனின்
'உள்ளாடைகளற்ற' வசை

கஞ்சி பரிமாறும்
அம்மாவின் கஞ்சத்தனம்

தேய்ந்த செறுப்பின் மீது
அந்தப் பெண்ணின் பார்வை

பிச்சைக்காரனின்
ஏளனச் சிரிப்பு

பேருந்துக்கு பணம் கொடுக்கும்
நண்பனின் நகைச்சுவை

தேநீர்கடை
குமாரன் அண்ணாச்சியின் துர்முகம்

பயமாயிருக்கிறது எனக்கு
பணம் வைத்திருக்கும் உன்னை


தமிழில் : ஆசிப் மீரான்

Read more...

முன்கை பற்றி நடத்தி!

>> Thursday, September 23, 2010

ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;

அணைத்தனன் கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!

என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை

இன்னாது உற்ற அறனில் கூற்றே!

திரைவளை முன்கை பற்றி

வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!


புறநானூறு - 255

பாடியவர்: வன்பரணர்

திணை: பொதுவியல்

துறை: முதுபாலை

விளக்கம் :  http://angumingum.wordpress.com/2008/04/14/words_puram/


***************************************

I am afraid to shout

I am afraid to shout for help
in this tiger infested place.
If I try to lift you by myself-
I can’t hold your broad chest in my arms.

O may unrighteous Death
who has approached you cruelly
feel embarrassed like me.
Dear one, just hold my wrist
and try to walk a little,
We shall try at least to reach
the shade of the hill beyond.

- Vanparanar

Purananuru – 255


Book : Love Stands Alone (Selections from Tamil Sangam Poetry)

Translated By : M.L.Thangappa - நேர்காணல்



Love Stands Alone - நூல் குறிப்புகள் :

http://sharanyamanivannan.wordpress.com/2010/06/27/review-a-r-venkatachalapathys-love-stands-alone/

http://httpdevamaindhan.blogspot.com/2010_02_01_archive.html

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6099

Read more...

என் கனவு

>> Tuesday, September 21, 2010

பல நாட்கள் ஆகிப் போனது
என் கனவை நான் மறந்தே போனேன்
ஆனால் அப்போது அங்கிருந்தது அது
என் முன்னால்
சூரியன் போல பிரகாசமாய்
என் கனவு

அப்புறம் அந்த சுவர் எழுந்தது
மெள்ள எழுந்தது
மெள்ளவே
எனக்கும் என் கனவிற்கும் நடுவே
எழுந்து கொண்டே இருந்தது
வானம் தட்டும் மட்டும்
அந்த சுவர்

நிழல்
நான் கருப்பாக இருக்கிறேன்
நான் அந்த நிழலுள் உறைந்துக் கிடக்கிறேன்
என் கனவின் வெளிச்சம்
இனி என்முன் இல்லை
என் மேல்
வெறும் தடிச்சுவர்
வெறும் நிழல்

என் கைகளே
என் கரிய கைகளே
சுவரை உடைத்து வெளியேறுங்கள்
என் கனவை கண்டெடுங்கள்
உதவுங்கள்
இந்த இருட்டை சிதைக்க
இந்த இரவை நொறுக்க
இந்த நிழலை உடைக்க
ஓராயிரம் சூரிய வெளிச்சங்களாக
சுழலும் ஓராயிரம் சூரியக் கனவுகளாக

தமிழில் : பூங்குழலி



********************************************

It was a long time ago
By Langston Hughes

It was a long time ago.
I have almost forgotten my dream.
But it was there then,
In front of me,
Bright like a sun--
My dream.
And then the wall rose,
Rose slowly,
Slowly,
Between me and my dream.
Rose until it touched the sky--
The wall.Shadow.
I am black.
I lie down in the shadow.
No longer the light of my dream before me,
Above me.
Only the thick wall.
Only the shadow.
My hands!
My dark hands!
Break through the wall!
Find my dream!
Help me to shatter this darkness,
To smash this night,
To break this shadow
Into a thousand lights of sun,
Into a thousand whirling dreams Of sun!

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP