Showing posts with label சஜிதரன். Show all posts
Showing posts with label சஜிதரன். Show all posts

மேலும் சில இரத்தக் குறிப்புகள் - அனார்

>> Sunday, April 18, 2010

மேலும் சில இரத்தக் குறிப்புகள்

-அனார்-


மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கப்பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்
இப்போது தான் முதல் தடவையாக காண்பதுபோன்று

“இரத்தம்” கருணையை, பரிதவிப்பினை
அவாவுகின்றது
இயலாமையை வெளிப்படுத்துகின்றது

வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்
குமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும்
குளிர்ந்து வழியக் கூடும்

கொல்லப்பட்ட குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத் தனமாக

களத்தில்
இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தை சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கௌரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்

சித்திரவதை முகாம்களின்
இரத்தக் கறைபடிந்திருக்கும் சுவர்களில்
மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்
தண்டனைகளின் உக்கிரத்தில்
தெறித்துச் சிதறியிருக்கின்றன

வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது


(தமிழ் வழி ஆங்கிலத்தில் தவ சஜிதரன்)


Some more notes of blood

Even though I've got used
To seeing blood each month
I turn dizzy and shocked
When my child comes to me
Screaming with a cut finger
As if it was the first time to see

Blood vies for love and anxiety
Manifests incapacity

The cold blood of
A sexually assaulted woman
May slither down
As the disgusting blood of a dead tarantula
As the sticky colour of her rumbling soul

The blood from the body
Of a murdered infant
Oozes out
So silently
So childishly

Those who shed and cause to shed
More blood on the battlefield
Have been honoured by the leaders
Elevated by them

The entreating senses of human souls
Have got scattered on the blood-stained walls
Of torture camps in the zeal of punishment

The bloody smell of malevolence
The bloody odor of the hunt
The same blood freezing in the boisterous streets
The blood diffused from and dried on the tombs
Continues to follow me

As the print of death

- Anar

(Translated from Tamil by Thava Sajitharan)

Read more...

தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்

>> Thursday, August 20, 2009

The Sorrow of Children Having Lost Their Streets


Children are no longer seen on our streets
Armored trucks are speeding up
Crushing the dreams of our children

After armed men, their faces
Masked with black cloth
Began to wander about,
Our children lost their streets

Our mothers seeking
To feed their children
Cajoled them they'd be taken
Away by armed men
Should they refuse to eat: After that,
Our streets lost their children

Arms have begun to devour
The magic of our children's universe
The gram seller walks idly about
The streets, wailing. Ice cream vans
Do not tarry at our streets
Street dogs stray freely without fear
There is no one to run after
The landmasters and get into them.

Streets having lost children
Cease to be streets
The smoke of armored vehicles
Glom on to trees like gloom

Kites flail from lampposts
Torn in the wind
Leaves fall off like the twittering
Of sparrows on tree branches
The misery of streets
Having lost children
Oozes in the songs of the old man
Selling balloons and masks

Hot wind absorbs the sighs
Exhaled by the boy confined
Inside his hut under the shade of a tree,
Looking at the chariot he has made
Out of unripe coconuts
His rusty bicycle wheel and its guide stick

Emptiness with wings sheared
Is seated on the swings

The tracks of armed men
Abound in the streets
Where the footprints
Of children are lost

Amidst the noise of speeding armored trucks
Is heard the sobbing sound of a mother
Her child sacrificed to another armored truck…

-Siththaanthan


Sithanthan is a noted poet in the Lankan Tamil literary sphere.

(Translated from Tamil by Thava Sajitharan -
blog: http://sajitharan.blogspot.com/
email: sajitharan@gmail.com )


மூலம்:

(http://tarunam.blogspot.com/)


தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்
- சித்தாந்தன்
............................................

எங்கள் தெருக்களில் குழந்தைகளைக்
காணவில்லை
குழந்தைகளின் கனவுகளை மிதித்துக்கொண்டு
இராணுவ வாகனங்கள் விரைந்து செல்கின்றன

முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்
நடமாடத் தொடங்கிய பிறகு
குழந்தைகள் தெருக்களை இழந்தன
தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி
உணவூட்டத் தொடங்கிய பிறகு
தெருக்கள் குழந்தைகளை இழந்தன

குழந்தைளின் உலகங்களின் அற்புதங்களை
ஆயுதங்கள் தின்னத்தொடங்கிவிட்டன
சுண்டல்க்காரன் வெறுமனே கூவித்திரிகிறான்
ஜஸ்பழவான்கள் தரிக்காது செல்கின்றன
தெருநாய்கள் அச்சமற்றுத்திரிகின்றன
லான்மாஸ்ரர்களைத் துரத்திச் சென்று ஏற எவருமில்லை

குழந்தைகளை இழந்த தெருக்கள்
தெருக்களாயிருப்பதில்லை

இராணுவ வாகனங்களின் புகை
மரங்களில் இருளாய் படிந்திருக்கிறது

மின் கம்பங்களில் தொங்குகின்ற பட்டங்கள்
காற்றில் கிழிபடுகின்றன
மரக்கிளைகளில் கீச்சிடும் குருவிகளின் குரலாய்
உதிர்கின்றன இலைகள்
பலூனும் முகமூடியும் விற்கும் முதியவனின்
பாடல்களில் வழிகிறது
குழந்தைகளை இழந்த தெருக்களின் துயர்

மரநிழல் குடிசையில் முடங்கிக்கிடக்கும்
சிறுவன்
தனது குரும்பட்டித்தேரையும்
கறள் ஏறிய சைக்கிள் வளையத்தையும்
அதன் ஓட்டு தடியையும்
எடுத்துப்பார்த்து விடும் பெருமூச்சை
உஸ்ணம் நிரம்பிய காற்று குடிக்கின்றது

ஊஞ்சல்களில் குந்தியிருக்கிறது
சிறகுகள் கத்தரிக்கப்பட்ட வெறுமை

குழந்தைகளின் சுவடுகள் தொலைந்த தெருக்களில்
இராணுவத்தடங்கள் பெருகிக்கிடக்கின்றன

விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்கு காவுகொடுத்த
தாயின் ஒப்பாரி.

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP