சுபாஷிதம் - மஹாகவி பர்த்ருஹரி

>> Tuesday, April 13, 2010


சமஸ்கிருதத்தில் உள்ள செவ்வியல் நூல்களில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக மதிக்கப்படும் மகாகவி பர்த்ருஹரியால் இயற்றப்பட்ட ‘சுபாஷிதம்’ என்ற இணையற்ற நூல் தமிழில் மதுமிதாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு 2005ஆம் ஆண்டில் வெளியானது. அவரை பற்றிய குறிப்புகளை இங்கு வாசிக்கலாம். சுபாஷிதம் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை இங்கு இடுகின்றோம்.





கிறக்கத்தில்
மூடிய விழிகளுடன்
இணைதலின்
அனுபவ ஞானம்
எவரிடம் பிரகாசிக்கிறதோ

இந்த ஞானமே
இருவரும் பரஸ்பரம்
இணைந்து இன்பம் நுகர
நிச்சயித்து
நிறைவேற்றிக் கொள்கிறது

(சிருங்கார சதகம் – இன்ப வர்ணனை)

*******************
ஒருவனிடம் பேசுகின்றனர்
இன்னொருவனைப் பார்க்கின்றனர்
வேறொருவனை நினைக்கின்றனர்

அழகிய பெண்களுக்கு
பிரியமானவன் யார்?


(சிருங்கார சதகம் – பெண்ணில் இருமை)


*******************

முழு மதியின் ஒளியினை அபகரித்த
மெல்லிய மேனியாளின்
தாமரை முகத்திலுள்ள
இதழமுது
விஷக்கனியின் சாறு

அருந்துகையில் அமுது

அருந்திய பின்
துன்பமளிக்கும் விஷமே.


(சிருங்கார சதகம் – பெண்ணில் இருமை)

*******************


கூந்தலை கலைத்து
கண்களை மூடச் செய்து

உடையினை வலிமையாய் வீசி எறிந்து
உடலை சிலிர்க்கச் செய்து
மெல்ல மேனியினை நடுங்கச் செய்து
உதடுகள் குவித்து மகிழ்வின் ஒலியினை
அடிக்கடி உச்சரிக்க வைத்து

இப்போது
குளிர் காலக் காற்று

நங்கையிடம்
நாயகன் போல் நடந்து கொள்கிறது


(சிருங்கார சதகம் – பனி மழை காலம்)

சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் – மதுமிதா


சுபாஷிதம் மொழிபெயர்ப்பு நூல் பற்றிய குறிப்புகளை கீழ்கண்ட தளங்களில் வாசிக்கலாம்






3 comments:

Vidhoosh April 13, 2010 at 9:46 AM  

அருமையான பகிர்வு. நன்றி. :)

www.bogy.in April 14, 2010 at 7:16 PM  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in April 14, 2010 at 7:17 PM  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP